Fact Check
மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனரா?
Claim
மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர்.
Fact
இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் நடைப்பெறவில்லை; வங்காளதேசத்தில் நடந்ததாகும்.
“மப்பு பானர்ஜியோட போலீஸ் வர்றதாதான்டா பேச்சி??? இப்படி திடுதிப்புனு ஆர்மி வந்தா என்ன அர்த்தம்? அரீ குல்லா கூ குக்கர்….” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றாரா ஈபிஎஸ்?
Fact Check / Verification
மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாக பரப்பப்படும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து அவற்றை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் பங்களாதேசத்தை சார்ந்த நிரபத் நியூஸ் எனும் ஊடகத்தில் இவ்வீடியோ குறித்து ஆகஸ்ட் 18, 2024 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் இச்சம்பவமானது பங்களாதேசத்திலுள்ள ஃபரிதாபாத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வங்கதேசத்தில் இரு கட்சியினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினர் வீட்டை தாக்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் அங்கு ராணுவம் வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது ஆகஸ்ட் 14, 2024 அன்று நடந்துள்ளது.
தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவமானது பங்களாதேசத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் நடைப்பெறவில்லை; வங்காளதேசத்தில் நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Nirapad News, dated August 18, 2024
Report by Daily Janakantha, dated August 18, 2024
Report by RTV News, dated August 18, 2024
Report by Dainikamadershomoy, dated August 18, 2024