வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkதமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் தமிழக மீனவரை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ”பாஜக அரசின் காவல்துறை தவறு செய்யாது.தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள். எனவேதான் கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

Screenshot from Twitter @Jasmine01737661
Screenshot From Facebook/Thirumavalavan Kambadasan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check / Verification

தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் ABP Nadu பெயரில் பரவி வரும் நிலையில் அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்தோம். அப்போது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டள்ளது நமக்குத் தெரிய வந்தது.

தொடர்ந்து, இதுகுறித்து ஏபிபி நாடு செய்தியாளர் ராஜாவிடம் கேட்டோம். அப்போது அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்று விளக்கமளித்தார். மேலும், அண்ணாமலை தரப்பில் அவரது செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த செய்தி போலியாகப் பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.

Also Read: மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று புதியதலைமுறை மற்றும் தினமலர் தரப்பில் நியூஸ்கார்ட் வெளியிடப்பட்டதா?

Conclusion

தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Twitter Post From, ABP Nadu, Dated February 19, 2023
Phone Conversation With, Raja, ABP Nadu, Dated February 19, 2023
Phone Conversation With, Prabhakar, Annamalai PA


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular