சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact CheckPoliticsமதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று புதியதலைமுறை மற்றும் தினமலர் தரப்பில் நியூஸ்கார்ட் வெளியிடப்பட்டதா?

மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று புதியதலைமுறை மற்றும் தினமலர் தரப்பில் நியூஸ்கார்ட் வெளியிடப்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களை “நீ எந்த சேனல், நீ எந்த சேனல்” என்று அண்ணாமலை மிரட்டியதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், “மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை. செய்தியாளர் சந்திப்பிற்கு மது அருந்திவிட்டு வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரிடம் நிதானமில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்” என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

Screenshot From Twitter @Shanmughavalli3
Screenshot from Facebook/ rj.josh.39

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டாரா?

Fact Check/Verification

மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்பதாக நியூஸ்கார்ட் சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்தோம்.

முதலில் வைரலாகியது புதியதலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ்கார்ட். பின்னர், அதைத்தொடர்ந்து தினமலர் நாளிதழ் பெயரிலும் அதே செய்தியைக் கொண்ட நியூஸ்கார்ட் வைரலாகியது. முதலாவது குறிப்பிட்ட நியூஸ்கார்ட்டில் எழுத்துக்கள் ஏற்ற இறக்கமாக இருந்ததைத் தொடர்ந்து புதியதலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது என்று பதிவிட்டுள்ளனர்.

அவர்களுடைய ”பத்திரிக்கையாளர்களை மிரட்டும் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதம்” என்கிற நியூஸ்கார்ட்டில் உபயோகித்திருக்கும் புகைப்படத்தை உபயோகித்து இந்த வைரல் நியூஸ்கார்ட்டினை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, அண்ணாமலை தரப்பில் அவரது செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, குறிப்பிட்ட இரண்டு நியூஸ்கார்ட் செய்திகளுமே போலியானது என்று அவர் உறுதி செய்தார்.

Viral Newscard
Puthiyathalaimurai Newscard

அதேபோன்று, தினமலர் தரப்பிலும் குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்ட் போலியானது என்று அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.

Also Read: இந்திய எல்லையில் எலுமிச்சை, மிளகாயை கட்டினாரா ராஜ்நாத் சிங்?

Conclusion

மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்பதாகப் பரவிய நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with Ivani, Puthiyathalaimurai, Dated January 04, 2023
Phone Conversation with Prabhakar, PA of Annamalai, Dated January 04, 2023
Facebook Post, From Puthiyathalaimurai, Dated January 04, 2023
Facebook Post, From Puthiyathalaimurai, Dated January 04, 2023
YouTube Video, From Puthiyathalaimurai, Dated January 04, 2023

Facebook Post, From Dinamalar, Dated January 05, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular