ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkவிவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்!

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்

Fact: அப்படம் விவசாயிகள் போராட்டத்திற்கு முன்பு பங்களாதேஷில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

“டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள் தவறி பாத்திரத்தை துளைத்திருக்கும் காட்சி. நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளை சுட்டுக் கொல்லும் அரசை எதிர்த்து அணி திரள்வோம்! சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டு புகைப்படம்ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல்

X Link | Archived Link

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல்

Archived Link

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் பங்களாதேஷை சேர்ந்த நயா திகந்தா எனும் ஆன்லைன் ஊடகத்தில்  வைரலாகும் இதே படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

மியான்மார் – பங்களாதேஷ் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகவும், இதன் காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பங்களாதேஷை சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவரின் பாத்திரத்தில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்தாகக் கூறி வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல்

தொடர்ந்து தேடுகையில் பிப்ரவரி 7, 2024 அன்று தாகா மெயில் வைரலாகும் இதே படத்தை பயன்படுத்தி மேற்கூறிய துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதாவது விவசாயிகள் போராட்டம் தொடங்கிய நாளுக்கு (பிப்ரவரி 13) ஆறு நாட்களுக்கு முன்பு இச்செய்தியானது வெளிவந்திருந்தது.

மியான்மார் போராளிக் குழுவுக்கும் ராணுவத்திற்கும் இடையே இந்த சண்டை நடந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சண்டையில் மூன்று வீடுகள் வெடிகுண்டுகளாலும், ஏழு வீடுகள் துப்பாக்கிக் குண்டுகளாலும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.   

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல்

தொடர்ந்து தேடுகையில் ATNbd24News எனும் பயனர் ஐடியை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பங்களாதேஷ் குடும்பத்தினர் வீட்டில் குண்டு துளைக்கப்பட்டதாக கூறி வைரலாகும் இதே படத்தை பிப்ரவரி 10, 2024 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல்

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் இப்படமானது விவசாயிகள் போராட்டம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே பங்களாதேஷ் – மியான்மார் எல்லையில் நடந்த சண்டையில் பாத்திரத்தில் குண்டு துளைக்கப்பட்டதாக கூறி பரவியதை காண முடிகின்றது. ஆகவே இப்படத்திற்கும் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெளிவாகின்றது.

Also Read: முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!

Conclusion

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும். வைரலாகும் படமானது விவசாயிகள் போராட்டத்திற்கு முன்பு பங்களாதேஷில் எடுக்கப்பட்ட பழைய படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடம் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தச் செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Daily Naya Diganta report, February 16, 2024
Dhaka Mail report, February 7, 2024
Facebook post, February 10, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular