ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்றாரா ஈ.பி.எஸ்?

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்றாரா ஈ.பி.எஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை – ஈ.பி.எஸ்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; அதனால்தான் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/prasanna.vengat.71

Facebook Link | Archived Link

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/kavas.dmk

Archived Link

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/The Black Spectacle

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லையா?

Fact Check/Verification

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஏபிபி நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பேதம் இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்றை ஏபிபி நாடு வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஏபிபி நாடும் வைராலும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று தெளிவு செய்து பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: சந்திராயன் 3 வெற்றிக்காக விரதம் இருக்கின்றாரா பிரதமர் மோடி?

Conclusion

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from ABP Nadu, Dated July 19, 2023

Tweet from ABP Nadu, Dated July 19, 2023
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular