திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkபாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது!

Fact: எண்ணெய் பாக்கெட்டை பல்லால் கடித்ததற்காகவே அவர் கைது செய்யப்பட்டார்.

“பாப்கார்ன் ஸ்டால் வைத்துள்ள நயாஸ், பெங்களூரில் உப்புக்கு பதில் மூத்திரம் கலந்து பாப்கார்ன் தயாரிக்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@NaMo_Bharathan

Twitter Link | Archived Link

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/venkatanathan.b

Facebook Link

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/mk.rameshkumaar

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லையா?

Fact Check/Verification

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்

முன்னதாக வைரலாகும் டிவி9 கன்னடாவின் முழு வீடியோவை அதன் யூடியூப் பக்கத்தில் தேடினோம்.  இதில் பெங்களூர் லால்பாகில் பாப்கார்ன் கடை வைத்திருந்த நவாஸ் எனும் முஸ்லீம் இளைஞர் பாப்கார்ன் சமைக்க வைத்திருந்த எண்ணெயில் துப்பியதாக கூறி போலீசார் அவரை கைது செய்து, அவரின் கடைக்கு சீல் வைத்ததாக கூறி இவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அவ்வீடியோவில் நவாஸை போலீசார் கைது செய்வதையும், இவன் முஸ்லீம்! இவன் எண்ணெயில் எச்சிலை துப்பினான் என்று முதியவர் ஒருவர் வாக்குவாதம் செய்வதையும் காண முடிந்தது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தேடுகையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நவாஸ் பாஷா தி நியூஸ் மினிட்டுக்கு அவர் தரப்பு நியாயத்தை கூறிய வீடியோ ஒன்றை காண முடிந்தது.

பாஷா காலையில் கடையை திறந்து, சுத்தம் செய்து விட்டு,  எண்ணெய் பாக்கெட்டை பல்லால் கடித்து திறந்து பாட்டிலில் நிரப்பியுள்ளார். இதை தூரத்திலிருந்து பார்த்த முதியவர் ஒருவர் அவரிடம் வந்து அவர் பெயரை கேட்டுள்ளார். அதற்கு நவாஸ் என்று பதிலளித்துள்ளார். உடனே முஸ்லீம் பையன் இவன், எண்ணெயில் மூன்று முறை எச்சில் துப்பி விட்டான, முஸ்லீம் எல்லாம் இப்படித்தான் என்று கூச்சலிட்டுள்ளார். உடனே கூட்டம் கூடியுள்ளது. நவாஸ் இல்லை என்று மறுத்துள்ளார். அதை அம்முதியவர் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்ததாக அவ்வீடியோவில் கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இச்சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், எண்ணெய் பாக்கெட்டை பல்லால் கடித்ததற்காக நவாஸ் கைது செய்யப்பட்டு, அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டதாகவும், இதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from Times Of India

இதனடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,

  1. நவாஸ் பாப்கார்னில் உப்புக்கு பதிலாக சிறுநீரை கலக்கவில்லை.
  2. நவாஸ் எண்ணெய் பாக்கெட்டை பல்லால் கடித்ததற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: சந்திராயன் 3 வெற்றிக்காக விரதம் இருக்கின்றாரா பிரதமர் மோடி?

Conclusion

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from TV9

Report from Times of India
Report from The News Minuite


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular