ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் – எடப்பாடி பழனிச்சாமி
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும். 

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பேரணி

“பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் மயக்கம் அடைந்தது பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

பேரணி
Screenshot from Facebook/Kumarsaran
Screenshot from Facebook/mahalaxmi.mahalaxmi.505523
Screenshot from Facebook/vsa.vsa.7509

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Fact Check/Verification

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; வெயிலில் மயக்கம் வரத்தான் செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.  

திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்தான், செய்தியாளரின் கேள்விக்கு ஈபிஎஸ், பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று பதிலளித்ததாக தந்தி டிவி பெயரில் நியூஸ்கார்ட் பரவுகிறது.

எனவே, தந்தி டிவி இவ்வாறு செய்தி ஏதேனும் வெளியிட்டுள்ளதா என்று அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். அதன்முடிவில், “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி” என்கிற நியூஸ்கார்ட் கிடைத்தது.

குறிப்பிட்ட அந்த நியூஸ்கார்டினை எடுத்தே அதனை வைரலாகும் நியூஸ்கார்டில் உள்ள வாசகங்களுடன் எடிட் செய்துள்ளனர் என்பது உறுதியாகியது.

Original News Card
Altered News Card

மேலும், இதுகுறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார். 

Also Read: Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?

Conclusion

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; வெயிலில் மயக்கம் வரத்தான் செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, Thanthi Tv, Dated May 22, 2023
Phone Conversation With, Vinoth, Thanthi TV, Dated May 23, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular