திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ரூபாய் நோட்டுகளே வேண்டாம் – அண்ணாமலை
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் ABP Nadu பெயரில் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும். 

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ரூபாய்

“ரூபாய் நோட்டுக்களே வேண்டாம் காகிதம் சீன கண்டுபிடிப்பு. நாணயத்தாள்கள் ஐரோப்பிய கிறுத்துவர்கள் அறிமுகம் செய்தது. இந்து மன்னர்களைப் போல தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை மோடிஜி கொண்டு வருவார். – அண்ணாமலை”  என்று அந்த நியூஸ்கார்ட் வைரலாகி வருகிறது.

ரூபாய்
Screenshot From Twitter @ARI_KumarDMK
Screenshot from Facebook/balachandar.500
Screenshot from Facebook/lakshmanan.thirumoorthy

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை பேசியதாக ABP Nadu வெளியிட்டதாக இந்த நியூஸ்கார்ட் பரவி வருகின்ற நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “ரூ.2000 நோட்டு வாபஸால் திமுகவுக்குதான் பாதிப்பு. என்னிடம் 2,000 ரூபாய் நோட்டு இல்லை; மூன்றரை வருடங்களாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை – அண்ணாமலை” என்று அவர் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் பகிரப்பட்டிருந்ததது.

அக்குறிப்பிட்ட கார்டை எடுத்தே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

Original News Card
Altered News Card

மேலும், இதுகுறித்து ABP Nadu டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் கணேஷ் ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார். எனவே, அண்ணாமலை பெயரில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

ரூபாய் நோட்டுகளே வேண்டாம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, ABP Nadu, Dated May 20, 2023
Phone Conversation With, Ganesh Ramachandran, ABP Nadu, Dated May 23, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular