சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Check2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றாரா சீமான்?

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றாரா சீமான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: 2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றார் சீமான்.

Fact: நாதக சார்பில் தஞ்சையில் போட்டியிடும் ஹுமாயூன் கபீரின் மகனையையே தன் மகன் என்று சீமான் கூறியதாக நாதக தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (23/03/2024) அன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்ற நிலையில், “2026 தேர்தலில் என் மகன் பெரியவனுக்கும் சீட்” என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டில் சீமான் குடும்பத்தினருடன் இருக்கும் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்

X Link | Archive Link

இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் எடிட் புகைப்படம்!

Fact Check/Verification

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக தகவல் ஒன்று பரவிய நிலையில் இதுக்குறித்து ஆராய்ந்தோம். அதில் இத்தகவல் தவறானது என்றும் தஞ்சையில் நாதக சார்பில் போட்டியிடும் ஹுமாயூன் கபீரின் மகனையையே தன் மகன் என்று சீமான் கூறியதாக நாதகவின் ஐடி விங் தரப்பில் விளக்கம் அளித்து டிவீட் ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அப்பதிவில் ஹுமாயூன் கபீரை வேட்பாளராக அறிமுகப்படுத்தும் நிகழ்வின் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அவ்வீடியோவில் அடுத்தமுறை ஹுமாயுனுக்கு சீட் கிடையாது. இளைஞர்களுக்குதான் சீட். அதில் என் மகன் பெரியவனுக்குதான் சீட் என்று ஹுமாயினிடம் சொல்லிவிட்டேன் என்று சீமான் பேசியிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் சீமான் “மூத்த மகனுக்குத் தேர்தலில் இடம்” என்று குறிப்பிட்டது ஹுமாயூனின் மூத்த மகனைத்தான் என்று நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் விளக்கம் அளித்து டிவீட் செய்திருப்பதை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து சன் நியூஸும் இடும்பாவனம் கார்த்திக்கின் விளக்கத்தை பதிவாக அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் சீமான் மகனுக்கு சீட் தருவேன் என்று கூறியது அவரது மகனுக்கு அல்ல; ஹுமாயுனின் மகனுக்கு என்று அறிய முடிகின்றது.

பொதுவாகவே சீமான் தன் கட்சி சார்ந்தவர்களை அண்ணன், தம்பி, தங்கை, மகன் என உறவு முறை வைத்து அழைப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி அவர் தன் கட்சி சார்ந்தவரின் மகன் குறித்து பேசிய கருத்தை, சீமான் குடும்பத்துடன் இருக்கும் படத்தை பயன்படுத்தி சன் நியூஸ் நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்ததும் தேவையில்லாத இந்த குழப்பத்திற்கு காரணமாக விளங்கியுள்ளது.

 Also Read: மும்தாஜின் உண்மையான படங்கள் என்று பரவும் தவறான படங்கள்!

Conclusion

2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Tweet from NTK IT Wing, Dated March 24, 2024
Tweet from Idumbavanam Kartthik, NTK, Dated March 24, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular