Claim: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் மேலுள்ள போக்சோ, 2 கிரிமினல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும்.
கர்நாடக குற்றவியல் நீதிமன்றம்
Fact: வைரலாகும் செய்தி உண்மையில்லை. வைரல் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் மேலுள்ள போக்சோ, 2 கிரிமினல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும்.கர்நாடக குற்றவியல் நீதிமன்றம்” என்று ஜூனியர் விகடன் வெளியிட்டதாக ஏப்ரல் 04ஆம் தேதியிட்டு இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தாரா?
Fact Check/Verification
அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால் அதில் வைரலாகும் நியூஸ்கார்ட் இடம்பெற்றிருக்கவில்லை.
எனவே, ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு வைரல் நியூஸ்கார்ட் குறித்து கேட்டபோது, “அது போலியான நியூஸ்கார்ட்: ஜூனியர் விகடன் அதை வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.
Also Read: கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?
Conclusion
அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாக பரவிய நியூஸ்கார்ட் போலியானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக நமக்கு தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone conversation with I.Britto, Junior Vikatan, Dated April 08, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)