வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024

HomeFact Checkசீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை...

சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை – CEO அறிக்கை

Fact: வைரலாகும் அறிக்கை போலியாக எடிட் செய்யப்பட்டதாகும். 

சீமானுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக  வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”நாதகவை சேர்ந்த திரு.சீமான் என்பவருக்கும் CSK அணி வீரர்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. CSK அணி வீரர்களுக்கு பயிற்சி அளித்ததாகவோ, உடன் அமர்ந்து உணவு உண்டதாகவோ திரு.சீமான் கூறினால் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் ஆகும் — CSK நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிக்கை வெளியீடு. என்னாங்கடா கடிதமாவே எழுதிட்டானுங்க.” என்று இந்த அறிக்கை புகைப்படம் வைரலாகிறது.

Screenshot from Twitter @b4l4ji’

Archived Link

Screenshot from Facebook/Jayavel Palanivel

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

  சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற IPL 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற பிறகு இவ்வாறு அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று தேடினோம். ஆனால், வீரர்களின் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களே இடம்பெற்றிருந்தன. மேலும், வைரலாகும் அறிக்கையின் மையப்பகுதி அறிக்கையுடன் ஒத்துப்போகாத எழுத்துருவில் அமைந்திருந்தது.

தொடர்ந்த நம் தேடலில், கடந்த 2019ஆம் ஆண்டு IPL டிக்கெட் விற்பனை தொடர்பாக காசி விஸ்வநாதன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை எடுத்தே தற்போது சீமான் குறித்து சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் பரவுகிறது என்பது உறுதியாகியது.  

Original Image
Edited Image

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from Chennai Super Kings, Dated March 12, 2019

Twitter Post From, TNCA, Dated March 12, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular