செவ்வாய்க்கிழமை, மே 28, 2024
செவ்வாய்க்கிழமை, மே 28, 2024

HomeFact Checkசெந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாக பரவும் செய்தி உண்மையா?

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாக பரவும் செய்தி உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது விடுவிப்பு

Fact: வைரலாகும் செய்தி கடந்த 2023ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாக வீடியோ செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது விடுவிப்பு” என்று இந்த செய்தி பரவி வருகிறது.

செந்தில் பாலாஜி
Screenshot from x @jafarul84687256

X Link

Screenshot from x @KannappanDMK2

X Link

Screenshot from x @NSelvarajan5

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

Fact Check/Verification

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.  அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிப்பு என்று வெளியாகிய செய்தி கடந்த ஜூலை 04, 2023 ஆம் ஆண்டு செய்தி என்பது நமக்குத் தெளிவாகியது.

கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மேகலா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அவ்வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப்பளித்த நீதிபதி நிஷா பானு, “ அவரது கைது சட்டவிரோதமானது. அவரை உடனடியாக விடுதலை செய்யலாம்”  என்பதாக தீர்ப்பளித்திருந்தார்.

ஆனால், குறிப்பிட்ட அமர்வின் மற்ற இரு நீதிபதிகளான பரதசக்ரவர்த்தி மற்றும் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அவருடைய கைது சரியானதுதான்; அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்திருந்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஜூலை 2023ல் செந்தில்பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு தீர்ப்பில் வெளியாகிய செய்தியை அவர் விடுவிப்பு என்பதாக தற்போது பரப்பி வருகின்றனர்.

Also Read: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?

Conclusion

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, News 18 Tamil Nadu, Dated July 04, 2023
Report from Hindustan Times , Dated May 06, 2024



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular