Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவிருக்கும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் கலந்துக்கொண்டு, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கும் ஆணையை வெளியிடவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இத்தகவலை உண்மை என்று நம்பி பலரும் இந்த நியூஸ்கார்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடயிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டில் இருப்பதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தந்தி தொலைக்காட்சி மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது. மேலும், தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்தும் இத்தகவலை நம்மிடம் உறுதி செய்தார்.
தந்தி தொலைக்காட்சி பெயரில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு உறுதியாகிய நிலையில், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் உண்மையானதா என உறுதி செய்ய அதுக்குறித்த தேடலை தொடங்கினோம்.
பிரதமரின் பயணங்கள் குறித்து அறிய மத்திய அரசின் Press Information Bureau இணையத்தளத்தை ஆய்வு செய்ததில், பிரதமர் தமிழகம் வருவதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தந்திருக்கவில்லை.
இதனையடுத்து தேடியதில், பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவிற்கு பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும் வரவில்லை. ஊடக தகவல் மட்டுமே கிடைத்துள்ளது என்று ராமநாதபுரம் கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூர் கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
மேலும் தேடியதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றை காண முடிந்தது. அப்பேட்டியில், பிரதமர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் 2 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்படும். பிரதமர் வரும் 30 ஆம் தேதி தமிழகம் வருவதற்கான நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. இந்த செய்தி எங்கே இருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. பாஜக சார்பில் அடுத்த வருடம் குருபூஜை விழாவில் கலந்துக்கொள்ள பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும். ஆனால் இந்த வருடம் பிரதமர் வருவதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளதை காண முடிந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில், பிரதமர் வரும் 30 ஆம் தேதி தமிழகம் வருவதற்கான எந்த ஒரு முடிவோ, அறிவிப்போ இதுவரை வரவில்லை என்பது தெளிவாகின்றது. பிரதமர் வருகையே உறுதியாகாத நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் என பரவும் தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி பிரதமர் ஆணை வெளியிடவிருப்பதாக பரவும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet, from Thanthi Tv, on Oct 11, 2022
PIB’s Data
Article, from Dinamalar, published on Oct 12, 2022
Youtube Video, from Thanthi Tv, on Oct 13, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vasudha Beri
November 21, 2025
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Ramkumar Kaliamurthy
September 19, 2025