ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சிறுபான்மையினர் குறித்து அமெரிக்க பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற இந்தியப் பிரதமர் மோடி 

Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும். அவர் விரிவாக அக்கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சிறுபான்மையினர் குறித்து அமெரிக்க பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற இந்தியப் பிரதமர் மோடி என்று வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

சிறுபான்மையினர்
Screenshot from Twitter @rajiv_dmk

Archived Link

சிறுபான்மையினர்
Screenshot from Twitter @Anti_CAA_23

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!

Fact Check/Verification

சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்றார் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நிகழ்வை முழுமையாக ஆராய்ந்தபோது, வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிக்கையாளர் சபரினா சித்திக் பிரதமர் மோடியிடம், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைமுறைகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுவர்களின் நடவடிக்கைகளில் நீங்கள் மெளனம் சாதிப்பதாகவும் மனித உரிமை குழுக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றன. இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நலனுக்காகவும் கருத்துரிமையை உறுதி செய்யவும் எந்தவிதமான நடவடிக்கைகளை நீங்களும், உங்களது அரசும் எடுக்கப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர்  மோடி, “இந்தியா ஜனநாயக நாடு. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எங்களுடைய மரபணுவிலேயே ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம் எங்களுடைய ஆத்மா. ஜனநாயகம் எங்களுடைய நாடி நரம்புகளில் இருக்கிறது. நாம் அனைவரும் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். நம்முடைய அரசியல் சாசனத்தில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனவே, சாதி, மதம், இன ரீதியான பாகுபாடு என்கிற கேள்விக்கே இடமில்லை.” என்று பதிலளித்திருந்தார். இதுகுறித்த முழுமையான வீடியோ அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, ANI, The Wire உள்ளிட்ட ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன. இதுகுறித்த மேலும் செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

எனவே, சிறுபான்மையினர் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்பதாகப் பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

Also Read: பிரதமர் மோடி பாடகி ரிஹானாவை பார்ப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Conclusion

சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்றார் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Tweet from President Biden, Dated June 22, 2023

YouTube Video From, ANI, Dated June 22, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular