ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து

Fact: தெற்கு ரயில்வே இதை மறுத்துள்ளது.

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ரயில் இஞ்சினில் தீப்பிடித்ததே இதற்கு காரணம் என்று சில ஊடகங்களும், உயர் அழுத்த மின் கம்பியில் உரசல் ஏற்பட்டதே காரணம் என்று வேறு சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி
Screenshot from Twitter@sunnewstamil

Twitter Link | Archived Link

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி
Screenshot from Twitter@ThanthiTV

Twitter Link | Archived Link

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி
Screenshot from Twitter@PTTVOnlineNews

Twitter Link | Archived Link

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி
Screenshot from Twitter@news7tamil

Twitter Link | Archived Link

ஊடகங்கள் வெளியிட்ட இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!

Fact Check/Verification

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ரயில் இஞ்சினில் தீப்பிடித்ததே இதற்கு காரணம் என்று சில ஊடகங்களும், உயர் அழுத்த மின் கம்பியில் உரசல் ஏற்பட்டதே காரணம் என்று வேறு சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் இத்தகவல் தவறானது என அறிய முடிந்தது. தெற்கு ரயில்வே ஊடகங்கள் வெளியிட்ட இச்செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளது.

“சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. HOG கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை வெளியேறியுள்ளது. அந்த கப்ளர் ரயிலிலிருந்து நீக்கப்பட்டு, அதன்பின் ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி
Screengrab from Twitter@GMSRailway
சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி
Screengrab from Twitter@DrmChennai

Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?

Conclusion

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet from @DrmChennai, Dated June 22, 2023

Tweet from @GMSRailway, Dated June 22, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular