புதன்கிழமை, மே 1, 2024
புதன்கிழமை, மே 1, 2024

HomeFact Checkகேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் ஒருவர் பாலில் குளித்தாரா?

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் ஒருவர் பாலில் குளித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்தார்.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் துருக்கியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் இறங்கி குளித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இச்சம்பவம் கேரளாவில் நடந்ததாகவும் அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல்

X Link | Archive Link

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல்

Archive Link

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Fact Check/Verification

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோவை வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் 2020 நவம்பரில் “WATCH: Turkish Dairy Forced to Shut Down After Worker’s ‘Milk Bath’ Video Goes Viral on TikTok” என்று தலைப்பிட்டு வைரலாகும் இச்சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல்
Screen shot of Report By News 18

அச்செய்தியில் இச்சம்பவம் துருக்கியில் நடந்ததாகவும், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த பால் நிறுவனம் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வைரலாகும் வீடியோவில் காணப்படுவது பால் அல்ல, சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவம் மற்றும் நீர் கலந்த கலவை என்று அந்த பால் உற்பத்தி செய்யும் நிறுவன அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் துருக்கியை சேர்ந்த ஹர்ரியேட் டெய்லி நியூஸ் ஊடகத்தின் இணையத்தளத்தில் ‘Milk bath’ man wins compensation lawsuit’ என்று தலைப்பிட்டு 2022 ஜூனில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல்
Screen shot of Report By Hurriyet Daily News

அச்செய்தியில் பாலில் குளித்ததாக எம்ரே சாயர் என்பவரும், அதை டிக்டாகில் பகிர்ந்ததற்காக ஊர் துர்குத் என்பவரும் 2020 ல் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் சாயர் தண்ணீரும் பாலின் தேவையில்லாத மிச்சங்களும் கலந்த கலவையிலேயே குளித்தார்; பாலில் அல்ல என நிரூபணமானதால் அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சாயர் 120000 துருக்கி லிராக்களை நஷ்ட ஈடாக கேட்டு அரசுக்கு வழக்குத் தொடுத்து, அதில் வென்று 1150 லிராக்களை நஷ்ட ஈடாக பெற்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கேரளாவில் நடந்ததல்ல; துருக்கியில் நடந்தது.
  2. வீடியோவில் காணப்படும் நபர் குளித்தது பாலில் அல்ல; தண்ணீரும் பாலின் தேவையில்லாத மிச்சங்களும் கலந்த கலவையிலேயாகும்.
  3. வைரலாகும் வீடியோற்கும் மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை; அது சமூக ஊடகங்களுக்காக இருவர் செய்த முட்டாள்தனமாகும்.

 Also Read: அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Report By News 18 dated November 10, 2020
Report By Hurriyet Daily News dated June 13, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular