Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பஹல்கம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பிடிக்கப்பட்டான்.
இத்தகவல் தவறானாதாகும். 2022 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியின் படத்தை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
காஷ்மீர் பஹல்கமில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி ஜம்மு –காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பிடிபட்டதாகவும், அவன் ஒரு பாஜக நிர்வாகி எனவும் கூறி புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
பஹல்கம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பிடிக்கப்பட்டதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, முன்னதாக உண்மையில் பஹல்கம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பிடிபட்டனரா என தேடினோம்.
அத்தேடலில் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பிடிக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மாறாக அத்தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டைகள் நடப்பதாகவே செய்திகள் கிடைத்தன.
ஆகவே வைரலாகும் தகவல் குறித்த உண்மையறிய, இத்தகவலுடன் பரப்பப்படும் படத்திலிருப்பவன் குறித்து கூகுள் லென்ஸ் உதவியுடன் தேடினோம். அத்தேடலில் ‘Villagers nab two Lashkar terrorists in J&K, hand them over to police’ என்று தலைப்பிட்டு ஜூலை 3, 2022 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படத்திலிருப்பவனின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தை காண முடிந்தது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தாலிப் ஹூசைன், ஃபைசல் அஹ்மது தார் எனும் பெயர்களுடைய லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் ரியாசி மாவட்டத்தின் துக்சான் கிராம மக்களின் உதவியோடு கைது செய்யப்பட்டதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீவிரவாதிகளிடமிருந்து பெரும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஜம்மு போலீஸ் ஐஜியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்த பதிவு ஜூலை 3, 2022 அன்று புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்படங்களில் வைரலாகும் தகவலுன் பரப்பப்படும் தீவிரவாதியின் படமும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் 2022 ஆம் ஆண்டில் ரியாசி மாவட்டத்தில் பிடிப்பட்ட தீவிரவாதியை, அண்மையில் பிடிப்பட்டதாக, பஹல்காம் தாக்குதலோடு தொடர்புப்படுத்தி, திரித்து பரப்பப்படுவதை அறிய முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனான தாலிப் ஹூசைன் ஜம்மு பகுதியின் பாஜக சிறுபான்மையினர் அணியின் சமூக ஊடகப்பிரிவின் தலைவராக இருந்ததாகவும், சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவன் பதவியிலிருந்து விலகியதாகவும் பாஜக தரப்பிலிருந்து கூறியதாக மிர்ரர் நவ் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வேறு சில ஊடகங்களும் இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
பஹல்கம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி கைது செய்யப்பட்டதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்தில் காணப்படும் தீவிரவாதி 2022 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவனாவான்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from Hindustan Times, Dated July 3, 2022
X post from IGP Jammu Zone, Dated July 3, 2022
Ramkumar Kaliamurthy
May 26, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025
Ramkumar Kaliamurthy
May 22, 2025