ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஅயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் தவறான வீடியோ!

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ராஜஸ்தானில் உள்ள சான்வாலியா சேத் கோவிலில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்ததாகும்.

“அயோத்தி ராமர் கோயிலில், கடந்த 10 நாட்களில், சுமார் 12 கோடி ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.! இந்தம்மாவே, பல லட்சத்தை அளித்து இருப்பார்கள் போல.!!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

X Link | Archived Link

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

Facebook Link

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் sethji_kadiwana எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 10, 2023 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் சான்வாலியா சேத் கோவில் உண்டியலில் அப்பெண் 10 இலட்சம் காணிக்கை செலுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

தொடர்ந்து தேடியதில் செப்டம்பர் 11, 2023 அன்று ஏசியாநெட் இந்தியில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் ராஜஸ்தானின் சித்தோர்கர் எனும் பகுதியில் உள்ள சான்வாலியா சேத் கோவிலில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

தொடர்ந்து தேடுகையில் ராமர் கோவிலில் 11 நாட்களில் 11 கோடி வசூலானதாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. ஆனால் வைரலாகும் வீடியோவுக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கிடைத்த ஆதாரங்களில் வாயிலாக உறுதியாகின்றது.

Also Read: விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா சீமான்?

Conclusion

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்நிகழ்வு அச்செய்தியில் ராஜஸ்தானின் சித்தோர்கர் எனும் பகுதியில் உள்ள சான்வாலியா சேத் கோவிலில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்ததாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களின் வாயிலாக தெளிவுப்படுத்தியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Instagram Post from the user, @sethji_kadiwana, Dated September 10, 2023
Report from Asianet News, Dated September 11, 2023
Report from Times of India, Dated February 02, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular