ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact CheckNLC விவகாரம்: அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும் என்றாரா சீமான்?

NLC விவகாரம்: அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும் என்றாரா சீமான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: NLC-க்காக விளைநிலங்களை கையகப்படுத்திய விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் – சீமான்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும். சீமான் இச்சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தவிர்த்து எந்த தனிநபரையும் அவர் விமர்சிக்கவில்லை.

நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கு இரண்டாவது சுரங்கப்பாதை அமைப்பதற்காக விளைநிலங்கள் நேற்று கையகப்படுத்தப்பட்டது. நெற்பயிர்களின் மீது பொக்லைன் இயந்திரத்தை இறக்கிய வீடியோவானது சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பெரும் சலசலப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நிறுவனமான NLC தமிழ்நாட்டில் விளைநிலங்களை நாசம் செய்கிறது. அண்ணாமலை நியாயமானவராக இருந்தால் மோடியை கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

NLC-க்காக விளைநிலங்களை அழித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@Anti_CAA_23

Twitter Link | Archived Link

NLC-க்காக விளைநிலங்களை அழித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/Vinoth Meenakshi

Facebook Link

NLC-க்காக விளைநிலங்களை அழித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/murugavel.kme

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

Fact Check/Verification

NLC-க்காக விளைநிலங்களை அழித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால்“வேளாண்மையை அழிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்” என்று சீமான் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத்தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று அவரும் தெளிவு செய்தார்.

இதனையடுத்து தேடுகையில் நேற்று மதுரையில் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வீடியோ ஒன்று சீமானின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதில் NLC குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, பொதுவாக மத்திய அரசையும் மாநில அரசையும் அவர் விமர்சித்திருப்பதை காண முடிந்தது. இக்கேள்விக்கு தமிழக முதல்வரை தவிர்த்து வேறு எந்த ஒரு தனிநபரையும் அவர் விமர்சித்திருக்கவில்லை.

இதனையடுத்து அண்ணாமலை திமுகவினர் குறித்து வெளியிட்ட சொத்துப்பட்டியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அண்ணாமலை நேர்மையாளராக இருந்தால் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விட்டதுபோல் அதிமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலையும் விட்டிருக்க வேண்டும். பாஜக கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவினர் புனிதர்களாகி விட்டார்களா? இது அரசியல் லாபத்திற்காக செய்யப்படுவது என்று சீமான் பேசியிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது என்னவென்றால்,

  1. வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
  2. NLC நிலம் கையக்கப்படுத்திய நிகழ்வு குறித்த கேள்விக்கு அண்ணாமலை குறித்து சீமான் எதுவும் கூறவில்லை.
  3. அண்ணாமலை திமுக அமைச்சர்கள் குறித்து வெளியிட்ட சொத்துப்பட்டியல் குறித்தே சீமான் விமர்சித்திருந்தார்.

Also Read: அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?

Conclusion

NLC-க்காக விளைநிலங்களை அழித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Thanthi TV, Dated July 26, 2023
Youtube video from செந்தமிழன் சீமான் – Seeman Official, Report from Thanthi TV, Dated July 26, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular