திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஎஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியா?

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி என்று நியூஸ்கார்டு ஒன்று வைரலாகி வருகின்றது.

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சூற்றுச்சுவர் இடிந்து விழுந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  இக்கல்லூரி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமானது என்று கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@Devar_Army

Twitter Link | Archived Link

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/marichamy.sms

Facebook Link

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Arul Kumar

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?

Fact Check/Verification

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி என்று நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இதில் இந்த நியூஸ்கார்ட் போலியானது தந்தி தொலைக்காட்சி மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் கோவை கல்லூரி விபத்து குறித்தும் தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்டு வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

வைராலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்து மாற்றப்பட்டது என்று உறுதியாகிய நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் உரிமையாளர் யார் என்று அறிய அக்கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆராய்ந்தோம். இதில் எஸ்.மலர்விழி என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார் என அறிய முடிந்தது.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Sri Krishna Arts and Science College’s Website

இதனையடுத்து எஸ்.பி.வேலுமணிக்கு இந்நிறுவனத்தில் பங்குள்ளதா என அறிய, 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் அவர் சமர்ப்பித்த சொத்து விவரங்களில் ஆராய்ந்தோம். அதில் எஸ்.பி.வேலுமணிகோ, அவர் குடும்பத்தினருக்கோ இக்கல்லூரி நிறுவனத்தில் பங்கோ அல்லது முதலீடோ இருப்பதாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from affidavit.eci.gov.in

முழு சொத்து விவர தாக்கலை இங்கே காணலாம்.

Also Read: அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Thanthi TV, Dated July 04, 2023

Tweet from Thanthi TV, Dated July 04, 2023
SP Velumai affidavit from affidavit.eci.gov.in
Sri Krishna Arts and Science College’s website


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular