ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஉலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளதா துருக்கி?

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளதா துருக்கி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உலகின் தலைசிறந்த தலைவர் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல்

“பெருமைமிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையை துருக்கி வெளியிட்டுள்ளது. இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்” என்று கூறி பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ள தபால் தலை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் - 1

Twitter link | Archive link

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் - 2

Facebook Link

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் - 3

Facebook Link


Also Read:
 இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமா இது?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

உலகின் தலைசிறந்த தலைவர் என்று கூறி பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலைவெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி தேடுகையில் பிரதமர் மோடிக்கு மட்டுமல்லாமல்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜி 20 மாநாட்டில் பங்குப்பெற்ற 33 நாடுகளின் தலைவர்களுக்கும் துருக்கி தபால் தலை வெளியிட்டிருந்ததை அறிய முடிந்தது.

பிஸ்னஸ் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் காண்கையில், துருக்கியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜி20 மாநாட்டை நினைவு கூரும் விதமாக, பிரதமர் மோடி உட்பட அம்மாநாட்டில் கலந்துக் கொண்ட 33 நாட்டின் தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள் அனைத்து தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக்கொள்ள முடிகின்றது.

இந்த தபால்தலைகள் துருக்கி அதிபர் ரெக்கப் தயிப் எர்டோகனால் அனைத்து தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து துருக்கி ஜி20-யின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தபால் தலைகள் குறித்து ஜி20 துருக்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

g20 summit 2015 website info
Screenshot of G20 2015 website

ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, 2015-இல் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபராக இருந்த விளாதிமிர் புதின், சீன அதிபராக இருந்த ஜீ ஜின்பிங், இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன், ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல், பிரேசில் அதிபராக இருந்த தில்மா ரூசுப், கனடா அதிபராக இருந்த ஜஸ்டின் ரூடோ, ஜெர்மனியின் ஆஞ்சிலா மேர்க்கல், ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஸோ ஏப், ஐரோப்பிய கவுன்சிலின் அதிபராக இருந்த டோனால்ட் டஸ்க், மற்றும் உள்நாட்டு பிரச்சனை காரணமாக இந்த மாநாட்டில் பங்குபெறாத ஃபிராங்கைஸ் ஹோலாண்ட்  ஆகியோருக்கும் தபால் தலைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது உலகின் தலைசிறந்த தலைவர் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு மட்டும் துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

Also Read: மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?

Conclusion

உலகின் தலைசிறந்த தலைவர் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு மட்டும் துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்பதையும், பிரதமர் மோடி உட்பட 2015 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துக்கொண்ட 33 நாட்டின் தலைவர்களுக்கும் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context/False Context

Source

G20 Turkey Twitter Handle
G20 Turkey Website
Article From Deccan Chronicle and Business India


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular