சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஉக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்றாரா பிரதமர் மோடி?

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்றாரா பிரதமர் மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே போர் நடந்து வரும் சூழலில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில், “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க முடியாததற்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை எதிர்க்கும் கட்சிகளே காரணம்“ என்று பிரதமர் மோடி உ.பி. தேர்தல் பரப்புரையில் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 1

Twitter Link | Archive Link

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 2

Facebook Link

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 3

Facebook Link

Also Read: ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

பிரதமர் மோடி இவ்வாறு பேசினாரா என்பதை உறுதி செய்ய அவரது அதிகாரப் பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகங்களிலும் இதுக்குறித்து தேடினோம். இதில் மேற்கண்ட தகவலை அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் பொய்யானது என விளக்கமளித்தார்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தனர்.

Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Thanthi Tv

Nirmalkumar, BJP


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular