Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், மற்றும் ஆவணங்கள் என்று பரவும் படங்கள்
Fact: வைரலாகும் பதிவில் காணப்படும் ஆவணங்கள் இருக்கும் புகைப்படம் தவிர்த்து, மற்ற படங்கள் வேறு நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்
“லாலு உறவினர் வீடுகளில் ரூபாய் 600 கோடி வருவாய் ஆதாரங்கள்! அமலாக்கத்துறை கண்டுபிடித்தது! மகன் தேஜஸ்வி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு! கட்டுகட்டாக பணம் நகைகள் ரயில்வே பணிக்கு லஞ்சமாக பெற்ற நில ஆவணங்கள்! கருணாநிதி குடும்பத்தோடு போட்டி போடும் அளவிற்கு லாலு குடும்பம் ஊழல்!” என்று குறிப்பிட்டு பணம், நகைகள், மற்றும் ஆவணங்கள் இருக்கும் புகைப்படங்களை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவரைப் போலவே இதே படங்களை பகிர்ந்து லாலு பிரசாத் யாதவ்வின் உறவினர்கள் வீட்டில் அவை கைப்பற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் இப்பதிவுகளின் சேமிப்பு பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?
லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், மற்றும் ஆவணங்கள் என்று குறிப்பிட்டு படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அவற்றுக்கும் லாலு பிரசாத் யாதவ் உறவினர்கள் வீட்டில் சோதனைக்கும் தொடர்புள்ளதா என ஆராய்ந்தோம்.
முன்னதாக பணம் கட்டு கட்டாக இருக்கும் புகைப்படம் குறித்து தேடினோம். இதில் இப்பணம் கடந்த வருடம் செப்டம்பர் 10 அன்று கொல்கத்தாவில் மொபைல் கேமிங் ஆப் கம்பெனி ஒன்றிலிருந்து அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் என்பதை அறிய முடிந்தது.
இதனையடுத்து தேடியதில் படத்தில் காணப்படும் நகைகள் இருக்கும் இரண்டு படங்களும் பங்கஜ் மேதியா, லோகேஷ் மற்றும் கார்த்திக் ஜெயின் என்பவர்கள் கணக்கில் காட்டாமல் சேகரித்து வைத்திருந்த நகைகள் என்பதும் இவற்றை அமலாக்கத்துறை மார்ச் 6, 2023 அன்று கைப்பற்றியுள்ளது என்பதும் தெரிய வந்தது.
அடுத்ததாக, நான்காவதாக காணப்படும் ஆவணங்கள் படம் குறித்து தேடியதில் அப்படம் மட்டும் லாலு பிரசாத் யாதவின் வழக்குடன் தொடர்புடையது என்பதை அறிய முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் நான்கு படங்களில் ஒரு படம் மட்டுமே லாலு பிரசாத் யாதவ் வழக்குடன் தொடர்புடையது, மற்றவை வேறு வழக்குகள் என அறிய முடிகின்றது.
Also Read: Fact Check: சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் உண்மையா?
லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், மற்றும் ஆவணங்கள் என்று பரவும் படங்களில் ஒன்று மட்டுமே லாலு பிரசாத் யாதவ் வழக்குடன் தொடர்புடையது என்பதும் மற்றவை வேறு வழக்குகளுடன் தொடர்புடையது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from India Today, Dated September 10, 2022
Tweet from @dir_ed, Dated March 06, 2023
Tweet from @ANI, Dated March 11, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 29, 2021
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024