Fact Check
மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
Claim
மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் - தவெக தலைவர் விஜய்
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மெரீனாவில் இடமிருக்கே. விமான நிலையம் கட்ட பரந்தூரேதான் வேணுட பரந்து விரிந்த மெரீனா கடற்கரையில் கட்டலா அங்கே என்ன விவசாயமா நடக்கிறது?
மக்களுக்கும் போய்வர வசதியாக இருக்கும்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
Fact Check/Verification
மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – தவெக தலைவர் விஜய்” என்கிற செய்தியுடன் நியூஸ்கார்ட் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரல் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.


தவெக தலைவர் விஜய் பேசிய முழுமையான உரையை கேட்டபோது அதிலும் அவர் கூட்டணி குறித்தே பேசியுள்ளார் என்பது நமக்கு உறுதியாகியது.
மேலும், பரவி வருகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்று புதியதலைமுறை விளக்கமளித்துள்ளது.

இந்த நியூஸ்கார்ட் குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று விளக்கமளித்தார்.
Also Read: பாஜக அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாரா அஜீத் குமார் மீது புகாரளித்த நிகிதா?
Conclusion
மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated July 04, 2025
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated July 08, 2025