சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkபொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படத்தின் உண்மை பின்னணி!

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படத்தின் உண்மை பின்னணி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படம்

நேற்றைய முன்தினம் ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் புதிய தொழில் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் இரண்டு கழிவறைகள் தடுப்பு சுவரில்லாமல் இருந்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில், தற்போது நடுவே தடுப்புகள் அமைத்து இரண்டு அறையாக பிரிக்கப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அப்புகைப்படத்தில் தடுப்பு சுவரில்லாமல் பல கழிவறைகள் அடுத்தடுத்து இருப்பதாக இருந்தது.

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படம் - 01
Screenshot from Twitter @Podcast_of_DB
பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படம் - 03
Screenshot from Twitter @saTya_wOrThLeSs
பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரவும் படம் - 04
Screenshot from Facebook / திராவிட கழுகு

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?

Fact Check/Verification

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலனாது ‘EHA MEDYA’ எனும் துருக்கி ஊடகம் 2019 ஆம் ஆண்டு பதிவிட்ட டிவீட்டிற்கு கொண்டு சென்றது. ‘ஐக்கிய அரபு அமீரகம் ஏமன் நாட்டை விட்டு வெளியேறிய பின், ஏமனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் செஞ்சிலுவை அமைப்பு செய்து வந்த மனிதாபிமான உதவிகளை நிறுத்திக் கொள்வதுடன், அங்கு நிறுவியிருந்த பொது கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை திருப்பி எடுத்துச் சென்றது’ என அந்த டிவீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் 2019 ஆம் ஆண்டில் ஏமனில் எடுக்கப்பட்ட படம் என்பதும், பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்பதும் தெளிவாகின்றது.

Also Read: சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?

Conclusion

பொள்ளாச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை என்று வைரலாகும் புகைப்படம் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet, from EHA MEDYA on Oct 22, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular