திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkகேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டது.

Fact: இத்தகவல் தவறானது என்றும், அனைத்து நாட்டின் கொடியும் ஒரே அளவில் வைக்கப்பட்டது என்றும் லுலு மால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த புகைப்படம் கேரளா கொச்சியில் உள்ள லூலூ மாலில் உலக கோப்பையை கொண்டாடும் வகையில் பல்வேறு நாடுகளின் கொடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . FLAG குறியீட்டின் படி மூவர்ண கொடிக்கு மேலேயோ அதைவிட உயரமாகவோ அல்லது அதற்கு இணையாகவோ வேறு எந்த கொடியும் வைக்க கூடாது. பிற கொடிகளுடன் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்த அனுமதி இல்லை. இந்திய கொடியை விட பாகிஸ்தான் கொடி ஏன் பெரியது ? Yusuff Ali M.A இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறீர்கள்? பாகிஸ்தான் உங்களுக்கு முன்னுரிமை என்று சொல்ல முயற்சிக்கிறீர்களா?”  என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

X Link | Archived Link

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

Facebook Link

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் தகவலில் இந்தியக் கொடியுடன் மற்ற நாட்டின் கொடியை இணையாக வைக்கவும், பிற கொடிகளுடன் காட்சிப்படுத்த அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் இத்தகவல் தவறானது என்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இந்தியக் கொடி விதி குறித்த கையேடு வாயிலாக அறிய முடிந்தது.

ஆனால் இந்தியக் கொடியை விட மற்ற நாட்டின் கொடி அளவு பெரியதாக இருக்க அனுமதி இல்லை. ஆகவே பாகிஸ்தான் கொடி இந்திய தேசியக் கொடியை விட அளவில் பெரியதாக இருந்ததா என உறுதி செய்ய, லுலு மாலின் தகவல் தொடர்பாளர் மிதுன் சுரேந்திரனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம்.

அவர் இத்தகவல் தவறானது என்று கூறி இதுக்குறித்த அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கையை நம்முடன் பகிர்ந்தார்.

அந்த அறிக்கையில்,

கிரிக்கெட் உலக கோப்பை தொடங்குவதை முன்னிட்டு கொச்சி லுலு மாலில் இப்போட்டியில் கலந்துக் கொள்ளும் நாடுகளின் கொடி காட்சிக்கு வைக்கப்பட்டது. இது தொடர்பாக உண்மை அறியாமல் பல பொய் செய்திகள் பரவி வருகின்றது.
மாலின் நடுப்பகுதியில் அனைத்து நாட்டின் கொடிகளும் ஒரே அளவில் ஒரே தூரத்தில் தொங்க விடப்பட்டது. இந்த கொடிகளை மேற்புறத்திலிருந்து, அதுவும் ஒரு கொடி இருக்கும் பக்கத்திலிருந்து படம் பிடித்தால், அந்த கொடி மற்ற கொடிகளை காட்டிலும் பெரிதாக தெரியும். ஆனால் கீழ் பகுதியிலிருந்து இக்கொடிகளை படம் பிடித்தால் அனைத்து கொடிகளும் சமமாகவே இருக்கும்.
சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் கொடி பெரிதாகவும், இந்தியக் கொடி சிறிதாகவும் வைக்கப்பட்டதாக தவறான தகவல் ஒன்று பரவி வருகின்றது. பாகிஸ்தான் கொடி இருக்கும் பக்கத்திலிருந்து படம் பிடித்தால், அக்கொடி பெரிதாகத்தான் இருக்கும். இதை வைத்து பாகிஸ்தான் கொடி பெரிதாக வைக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறான கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிதுன் சுரேந்திரன் இந்த அறிக்கையின் கூடவே சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட அப்படங்களில், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நாட்டின் கொடி பெரிதாக இருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Also Read: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Conclusion

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Phone Conversation With Mithun Surendran, Media Coordinator, LuLu Mall, Trivandrum
Flag code of India


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular