ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact CheckViralகலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத்...

கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்றார் அர்ஜூன் சம்பத்
Fact: இத்தகவல் பொய்யானது என்று அர்ஜூன் சம்பத் மறுத்துள்ளார்

‘கலாஷேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் போன்ற தவறுகள் நிகழும்போது உண்மையான இந்துக்கள் கண்டும் காணாமல் போக வேண்டும். மல்லாந்து படுத்து உமிழக் கூடாது’ என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/yesudas.devaraj
 கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/arul.moses.39
 கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/amanulla.jenena

இதே நியூஸ்கார்டை நியூஸ்செக்கரின் டிப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு வாசகர் ஒருவர் அனுப்பி இதுக்குறித்து கேட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் மோடி மற்றும் அமித்ஷா என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Factcheck / Verification

கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக அர்ஜூன் சம்பத் இக்கருத்தை தெரிவித்துள்ளாரா என்று அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகங்களில் தேடினோம். இத்தேடலில் அர்ஜூன் சம்பத் இவ்வாறு பேசியதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அர்ஜூன் சம்பத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அதற்கு அவர், “இது பொய்யான தகவல், இக்கருத்தை நான் தெரிவிக்கவில்லை”  என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலர் லோகோவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனம் இதை வெளியிட்டதா என அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்ந்தோம். இதில் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தினமலர் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பாளர் தண்டபாணியை தொடர்புக் கொண்டு விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, தினமலர் இதை வெளியிடவில்லை என்று அவர் தெளிவு செய்தார்.

Also Read: நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!

Conclusion

கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Arjun Sampath, Founder and Head of Hindu Makkal Katchi, Dated April 11, 2023
Phone Conversation with Dhandapany, Dinamalar, Dated April 11, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular