சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் மோடி மற்றும் அமித்ஷா என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

கர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் மோடி மற்றும் அமித்ஷா என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

கர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் காட்சியளித்த பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட போது. கர்நாடகாவில் ரமலான் உடையில் வேடம்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது. நம்முடைய வாசகர் ஒருவர் இப்புகைப்படத்தை டிப்லைனில் அனுப்பி கேள்வி எழுப்பியிருந்தார்.

Screengrab from Facebook/sheik.maideen.752
Screengrab from Facebook/ajoo.joachim

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!

Factcheck / Verification

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் தொப்பியை அணிந்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதில், குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் தலையில் இஸ்லாமிய தொப்பி அணிந்திருப்பதாக குறிப்பிட்ட புகைப்படமே எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியானது.

Edited Image
Original Image

கடந்த 2019ஆம் ஆண்டு, முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவையொட்டி அவருடைய குடும்பத்தினரை டெல்லியில் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படம் என்று News 18, oneindia உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியுடன் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட புகைப்படத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா இணைந்து மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் வீட்டில் இருந்து வெளிவரும் புகைப்படத்தை எடுத்தே வைரல் புகைப்படத்தை எடிட் செய்துள்ளனர் என்பது உறுதியாகியது.

Also Read: Fact Check: இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக இருந்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி உண்மையா?

Conclusion

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் தொப்பியை அணிந்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
News Report From, News 18, Dated August 28, 2019 News Report From, OneIndia, Dated August 24, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular