சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckViralFact Check: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்ததா பாஜக?

Fact Check: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்ததா பாஜக?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்தது பாஜக
Fact: வைரலாகும் வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டதாகும்.

நடக்கவிருக்கும் கர்நாடகா தேர்தலில் பாஜகவினர் ஓட்டுக்காக பணம் தந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கர்நாடகாவில் ஓட்டுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter @maree_kannan
கர்நாடகாவில் ஓட்டுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter @MaheenSylvan
கர்நாடகாவில் ஓட்டுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter @shafeeqkwt

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை இந்தியில் பேச ஆட்சேபித்தாரா?

Fact Check/Verification

கர்நாடகாவில் ஓட்டுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி ஆராய்ந்தோம்.

இதில் வைரலாகும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டதல்ல, தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.

விருதுநகர் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெலங்கானாவின் ஹுஸுராபாத் இடைத்தேர்தலில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டி வைரலாகும் இதே வீடியோவை அக்டோபர் 28, 2021 அன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து வைரலாகும் வீடியோவை உற்று நோக்கியதில், வீடியோவில் காணப்படும் பெண் வைத்திருக்கும் பண உறையில் பாஜக தலைவர் எட்டாலா ராஜேந்தரின் படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

எட்டாலா ராஜேந்தர் யார்?

எட்டாலா ராஜேந்தர் தெலங்கானாவில் இருக்கும் ஹுஸுராபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரவார்.  இவர் தெலங்கானா முதல்வர் சந்தரசேகர் தலைமையில் இயங்கும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியில் அமைச்சராக இருந்தார். இவர் மீது நில அபகரிப்பு புகார் வந்ததை தொடர்ந்து இவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஹுஸுராபாத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

எட்டாலா ராஜேந்தர் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து, பாஜக வேட்பாளாராக இடைத்தேர்தலை சந்தித்தார். இவர் இந்த தேர்தலில் 90,533 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஹுஸுராபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மாறினார்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு தற்போது கர்நாடகாவில் நடந்ததல்ல, அது 2021 ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடந்தது என்பது தெளிவாகிறது.

Also Read: கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று பரவும் தவறான புகைப்படம்!

Conclusion

கர்நாடகாவில் ஓட்டுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக வைரலாகும் வீடியோ, உண்மையில் தெலங்கானாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet by Manickam Tagore on October 28, 2021
News report by Hindustan Times on November 2,2021
Official Facebook page of Eatala Rajender

(இந்த செய்தி கட்டுரையானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular