இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதமா?
UPI முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, அது தோல்வியடைந்தால், வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று கூறினாரா திருமாவளவன்?
6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியதாக கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்

ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணமா இது?
ஸ்டாலின் மருமகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகக் கூறி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்துங்கள் என்றாரா ஸ்டாலின்?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்தி சரிபார்த்துவிட்டு திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து சைக்கிளில் வந்து வாக்களித்தாரா நடிகர் விஜய்?
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் என்று பரவிய தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)