இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதா?
பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ பொய்யானதாகும்.

லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றாரா திமுக எம்.பி. பழனிமாணிக்கம்?
மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று திமுக பழனிமாணிக்கம் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

‘குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும்’ என்றாரா குஷ்பு?
குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் என்று நடிகை குஷ்பு கூறியதாகபரவும் தகவல் பொய்யானதாகும்.

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் ‘பெரியார் சிலை இடம்பெற்றது தவறு’ என்றாரா வீரமணி?
குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி.வீரமணி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)