இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினாரா?
இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையானதா?
சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று கூறி பரவும் புகைப்படம் தவறானதாகும்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறினாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?
தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

ராசு வன்னியர் என்று வழித்தடம் ஒன்றிற்கு பெயரிட்டதா கலிஃபோர்னியா அரசு?
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வழித்தடம் ஒன்றிற்கு ராசு வன்னியர் அவென்யூ என்று கலிஃபோர்னியா அரசு பெயரிட்டதாக கூறி பரவும் புகைப்படம் போலியானது.

நடிகர் விஜய் தலையிலிருந்து விக் கழண்டதாக பரவும் வீடியோ!
நடிகர் விஜய் தலையில் அணிந்திருந்த விக் கழண்டதாக பரவும் வீடியோ போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)