இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்றாரா சீமான்?
சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்றாரா வன்னி அரசு?
சீமானை போல் திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்று வன்னி அரசு கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் 57 பேரை நாய் கடித்ததா?
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய் கடித்தது என்று பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

திருப்பதி அர்ச்சகர் வீட்டு வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளா இவை?
திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)