இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்?
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி எனப்பரவும் வதந்தி!
நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி என்பதாகவும், அவர் அருகே இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் எனவும் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி
தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய இளைஞர்கள்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ விழிப்புணர்வுக்காக சித்தரிக்கப்பட்டதாகும்.

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)