இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

துபாய் செல்ல முதலமைச்சர் அணிந்த ஜாக்கெட் விலை 17 கோடி என்று சொன்னாரா நிதியமைச்சர்?
துபாய் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என்று நிதியமைச்சர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்றாரா சுகி சிவம்?
பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்று பிரபல பேச்சாளர் சுகி சிவம் கூறியதாகப் பரவுகின்ற தகவல் போலியானதாகும்.

உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?
உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

கனிமொழி திமுகவிலிருந்து விலகுகின்றாரா?
கனிமொழி திமுகவிலிருது விலகவிருப்பதாக கூறி பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகமா?
தமிழகத்தில் இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகப்படுத்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)