Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் தமிழக அரசு வேலைவாய்ப்புகள், திட்டங்கள், அறிவிப்புகள் என பல தகவல்கள் பரவி வருவதை அண்மை காலங்களில் அதிகம் காண முடிகின்றது. இதனூடே பொய் செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் கூட வாகன ஓட்டுனர்களுக்கு, தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாக ஒரு தகவலும், சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரும் கைது செய்யப்படுவார் என மற்றொரு தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. இத்தகவல்களை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து பொய்யானவை என்று விளக்கி இருந்தோம்.
இந்த வரிசையில் தற்போது, “தனியாக ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்யும் பெண்கள், அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) செய்தால் காவல்துறையினர் அந்த வாகனத்தை ஜிபிஆர்எஸ் (GPRS) மூலம் கண்காணிப்பர்” என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் இத்தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
சென்னை மாநகரின் ஒருங்கிணைந்த குற்ற உளவுப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police-II, Organised Crime Intelligence Unit) சரவணன் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலானது முற்றிலும் பொய்யானது என தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் மேற்கண்ட பொய் தகவலானது பெங்களூர் மற்றும் தெலங்கானா பகுதிகளில் கடந்த காலங்களில் பரவியுள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் காவல்துறையினர் இதை பொய் என்று தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமான PIB (Press information bureau) India –விலும் பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் “தனியாக பயணம் செய்யும் பெண்கள் 9969777888 எனும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் காவல்துறை அந்த வாகனத்தை கண்காணிக்கும் சேவை மும்பையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டதென்றும், இச்சேவை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெளிவாகின்றது.
Also Read: கோட்சேவை மாவீரன் என்றாரா சீமான்?
தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
S. Saravanan, Superintendent of Police-II, Organised Crime Intelligence Unit
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 4, 2022
Ramkumar Kaliamurthy
January 7, 2025
Ramkumar Kaliamurthy
April 5, 2022