வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஅண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்றாரா காயத்ரி ரகுராம்?

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்றாரா காயத்ரி ரகுராம்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல்

உண்மையை பேசியதால்தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையை பேசுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை அண்ணாமலை போன்ற ஆகாச புளுகர்களுக்குத்தான் அங்கே இடம் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @Akshithaa_
அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / hanuman.raja.7
அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / phorkodiyendhi.phorkodiyendhi.9

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?

Fact Check/Verification

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.  இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

மாறாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட மறுப்பு பதிவை நம்மால் காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில்,  இத்தகவல் பொய்யானது என்பதை அவரும் தெளிவு செய்தார்.

Also Read: ‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?  

Conclusion

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Facebook post, from News 7 Tamil, on November 22, 2022
Phone Coversation with Gayathri Raghuram, on November 24, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular