வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும்  வதந்தி!

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும்  வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் தகவல்

“படத்தில் நீங்கள் பார்ப்பது மூன்றரை அடி உயரமுள்ள IAS அதிகாரி ஆரத்தி டோக்ரா. UPSC பரிட்சையில் தன்னுடைய முதல் முயற்சியிலேயே அகில இந்திய ரீதியில் 56வது இடம் வந்தார். இப்போது அவரது சேவையை பாராட்டி நம் பிரதமர் மோடி அவர்கள் அவரது காலைத் தொட்டு வணங்குகிறார்”  என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் தகவல்  - 1

Twitter Link | Archive Link

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் தகவல்  - 2

Facebook Link

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் தகவல்  -  3

Facebook Link

Also Read: தீண்டாமை காரணமாக ஆற்றில் குளித்த இளைஞர்களை அடித்து விரட்டிய அந்தணர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

ஆர்த்தி டோக்ரா யார்?

ஆர்த்தி டோக்ரா உத்தர்காண்டின் டேராடூன் பகுதியில் பிறந்தவர்.  3 அடி 2 இன்ச் உயரம் கொண்ட இவர் 2006 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்போது ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் குறித்தும், இவர் சாதனை கருத்தும் ஊடகங்களில் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளது. அக்கட்டுரைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் விழுந்ததாக தகவல் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில்  வைரலாகும் இத்தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே ஆங்கில மொழியில் வைரலாகியுள்ளதையும், அதை நியூஸ்செக்கர் ஆங்கில பிரிவினர் ஆய்வு செய்து, வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று செய்தி வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது. நியூஸ்செக்கர் ஆங்கிலம் வெளியிட்டிருந்த செய்தியை இங்கே படிக்கலாம்.

நியூஸ்செக்கர் ஆங்கிலம் வெளியிட்டுள்ள செய்தியின்படி காண்கையில் வைரலாகும் படத்தில் இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா அல்ல, அவர் பெயர் ஷிகா ரஸ்தோகி ஆகும்.

பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலய திறப்பு விழாவில் பங்குபெற கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாரணாசி சென்றிருக்கையில், மாற்றுத்திறனாளியான ஷிகா ரஸ்தோகியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ரஸ்தோகி பிரதமரிடம் ஆசி வாங்க அவர் காலை தொட முற்பட்டபோது, பிரதமர் அவரை தடுத்து நிறுத்தி, அவர் காலை தொட்டு வணங்கியுள்ளார்.  

இச்சம்பவம் குறித்து ஜீ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே படிக்கலாம்

உண்மை செய்தி
Screenshot of article published by ZEENEWS

வைரலான இச்சம்பத்தை தொடர்ந்து ஷிகா ரஸ்தோகி ஏபிபி கங்காவுக்கு பேட்டி அளித்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில், பிரதமர் மோடி ஷிகா ரஸ்தோகி காலில் விழுந்து வணங்கிபோது எடுக்கப்பட்ட புகைப்படமே, ஆர்த்தி டோக்ரா காலில் விழுந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தவறாக பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

Also Read: சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்றாரா அண்ணாமலை?

Conclusion

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்று உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Misleading Content/Partly False

Sources

Media Reports from Zee News Dated on Dec 16, 2021
YouTube Video from ABP Ganga published on Dec 16, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular