ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகை ஏந்திய ரசிகர் 

Fact:  வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சோனியா காந்தி இடம்பெற்றுள்ள பதாகையை தூக்கி பிடித்திருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தியா
Screenshot from X @Hereprak

Archived Link

Screenshot from X @Mark2Kali_

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

Fact Check/Verification

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்திய ரசிகர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது பல்வேறு செய்திகளில் அப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், அப்பதாகையில் இஸ்ரேலுக்கு ஆதரவான வாசகங்களே இடம்பெற்றிருந்தன. மேலும், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

”Israel Thanks India After Solidarity Poster Displayed During Pak Match In Ahmedabad | Watch” என்று வைரலாகிய நபர் மற்றும் அவரது கைகளில் இருந்த பதாகை தொடர்பான கட்டுரையை வெளியிட்டிருந்தது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

CNN News 18 ஊடகவியலாளார் சித்தாந்த் மிஸ்ரா வைரல் புகைப்படத்தின் உண்மையான பதிப்பான அந்த ரசிகர் இஸ்ரேலுக்கு ஆதரவான பதாகை தாங்கியிருக்கும் புகைப்படத்தை தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக ரசிகர் பதாகை காட்டிய அப்புகைப்படத்தை எடுத்தே மு.க.ஸ்டாலின் மற்றும் சோனியா காந்தி இடம்பெற்றிருப்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் Naor Gilon இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கு இந்த ரசிகரின் பதாகை புகைப்படத்தை பகிர்ந்து இந்தியாவிற்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் கைகளில் ஸ்டாலின் – சோனியா காந்தி இடம்பெற்ற பதாகையை ஏந்தியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
YouTube Video From Hindustan Times, Dated October 14, 2023
X post from, Naor Gilon, Dated October 14, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular