ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றார் அண்ணாமலை.

Fact: இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும், நியூஸ் தமிழ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.

கடந்த திங்களன்று (12/02/2024) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதுகுறித்து ஆளுநர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாககவும், தமிழக அரசு அதை புறக்கணித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது; சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும்” என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

X Link | Archived Link

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் பழைய படம்!

Fact Check/Verification

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அண்ணாமலை இவ்வாறு கூறினாரா என்பது குறித்து தேடினோம்.

அதில் அண்ணாமலை நேற்றைய முன்தினம் (13/02/2024) பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆளுநர் வெளிநடப்பு குறித்து பேசி இருப்பதை காண முடிந்தது. அதிலும் தேசிய கீதம் குறித்த அவர் பேசுகையில் (12:02 நேரத்தில்), “பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன்பின் தேசிய கீதம் பாடப்பாடும். அதன்பின் சபை நடவடிக்கைகள் நடத்தப்படும். சபை நடவடிக்கைகள் முடிந்தப்பின் மறுபடியும் தேசியகீதம் பாடப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படும்”  என்று பேசி இருப்பதை காண முடிந்தது. இந்த பத்திரிக்கை சந்திப்பானது சாணக்யா யூடியூப் சேனலில் இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், அவரும் “வைரலாகும்இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று உறுதி செய்தார்.

வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று உறுதியாகிய நிலையில், வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ் தமிழ் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து நியூஸ் தமிழின் ஆசிரியர் தினேஷைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை நியூஸ் தமிழ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

 Also Read: பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube video By Chanakyaa, Dated February 13, 2024
Conversation With S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP

Conversation With Dinesh, Editor, Tamil News 24×7


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular