செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkபஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் வீடியோ.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 2022 நவம்பரில் நடந்த பழைய சம்பவமாகும்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 2-ஆவது நாளாக நந்து வரும் நிலையில், “பஞ்சாப் பொதுமக்களை பிரதிபலிக்கும் இந்த அம்மாவுக்கு பாராட்டுங்கள் பஞ்சாபில் சில விவசாயிகள் அமைப்பு காலிஸ்ஸ்தானியர்களுடன் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு முக்கிய சாலைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் எந்த அரசாங்கமும் தைரியமாக அதுவும் விவசாயிகள் போர்வையில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யோசிப்பார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் பெரிய நெருக்கடி கொடுக்கவே இந்த சதி திட்டம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக  பரவும் வீடியோ

X Link | Archived Link

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக  பரவும் வீடியோ

Facebook Link

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக  பரவும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் பழைய படம்!

Fact Check/Verification

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் ஸ்க்ரோல் பஞ்சாப் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ நவம்பர் 06, 2022 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக  பரவும் வீடியோ
Screengrab from Facebook post by @scrollpunjab

தொடர்ந்து தேடுகையில் ஃபோக்கஸ் பஞ்சாப் தே எனும் யூடியூப் பக்கத்தில் நவம்பர் 05, 2022 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து ஃபோக்கஸ் பஞ்சாப் தேவின் நிருபர் மிதன் தர்ஷனிடம் வைரலாகும் வீடியோ குறித்தும், அதன் பின்னணி குறித்தும் நியூஸ்செக்கர் சார்பில் விசாரிக்கையில், வைரலாகும் வீடியோவுக்கும் தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உறுதி செய்தார்.

2022 நவம்பரில் சம்யுக்த கிசான் மோர்ச்சா சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், விவசாயிகள் பல குழுக்களாக பிரிந்ததாகவும், அதில் ஒருகுழுவினர் ராஜ்புரா அருகில் சாலையை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், அந்த மூதாட்டி ஆத்திரமடைந்து அவ்வாறு பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

 Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடம் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Facebook Post By @scrollpunjab, Dated November 6, 2022
Youtube video By Focus Punjab Te, Dated November 5, 2022
Conversation With Punjabi Tribune Reporter Darshan Mitha

இவ்வீடியோ குறித்து நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே செய்தி வந்துள்ளது. அதை இங்கே காணலாம்.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular