செவ்வாய்க்கிழமை, மே 21, 2024
செவ்வாய்க்கிழமை, மே 21, 2024

HomeFact Check48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம் உண்மையானதா?

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: 48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டனர்.

Fact: வைரலாகும் படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படமாகும்.

“பாகிஸ்தானின் எல்லையான ராஜஸ்தானின் பேட்மரில் 48° வெயிலில் பணியில் இருக்கும் போது சாலையில் உணவு உண்ணும் இந்திய ராணுவப் பெண்கள். இவர்கள் உண்மையான ஹீரோக்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்

X Link | Archive Link

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்

X Link

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

Fact Check/Verification

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படத்தை கூர்மையாக கவனிக்கையில் அப்படம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை காண முடிந்தது.

அப்படத்தில் இருந்த இராணுவ வீராங்கனைகளுள் இருவருக்கு அதிகப்படியாக ஒரு கை இருந்தது. அதேபோல அந்த வீராங்கனைகளின் தோள்பட்டையில் இருந்த கொடிகள் இந்திய நாட்டின் கொடியிலிருந்து வேறுபட்டிருந்தது.

தொடர்ந்து hivemoderation.com-இன் உதவியுடன் வைரலாகும் படம் குறித்து ஆராய்கையில் அப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படம் என்று உறுதியானது.

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்
Screengrab from hivemoderation.com

தொடர்ந்து isitai.com, huggingface.co உள்ளிட்ட இணையத்தளங்களை பயன்படுத்தி சோதிக்கையிலும் இப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படம் என்றே நமக்கு பதில் கிடைத்தது.

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்
Screengrab from isitai.com
48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்
Screengrab from huggingface.co

இதனையடுத்து தேடுகையில் வந்தே மாதரம் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 26, 2024 அன்று இப்படம் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்

தொடர்ந்து அப்பக்கத்தில் தேடுகையில் ராணுவம் தொடர்பாக இதுப்போன்று வேறு சில படங்களும் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம்

இதனையடுத்து அந்த ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய விஷால் மோவாலியா என்பவரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் படம் குறித்து விசாரித்தோம். அவர், ‘வைரலாகும் படத்தை நாங்கள்தான் உருவாக்கினோம், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்படமானது உருவாக்கப்பட்டது’ என்று நமக்கு பதிலளித்தார்.

Also Read: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?

Conclusion

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படமாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook post from Vande Mataram, Dated April 26, 2024
Phone Conversation with Vishal Movaliya, Admin of Vande Mataram
hivemoderation.com
isitai.com
huggingface.co
Self Analysis


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular