சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckRSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் தவறான வீடியோ!

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: RSS பயிற்சி முகாமில் சித்ரவதை செய்யப்படும் குழந்தைகள்

Fact: இத்தகவல் தவறானதாகும். இச்சம்பவம் நடந்தது RSS பயிற்சி முகாமில் அல்ல; சமஸ்கிருதம் சொல்லி தரும் குருகுலப் பள்ளியிலாகும்.

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் இளைஞர் ஒருவர் சிறுவன் ஒருவனை பலமாக தாக்குவதுடன், அவனை தூக்கி தரையில் அடிப்பதாக இருந்தது.

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archived Link

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் Posts English எனும் இணைய ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து நேற்று செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவமானது உத்திரப்பிரதேசத்தின் சித்தாப்பூர் பகுதியிலிருக்கும் சமஸ்கிருத பள்ளி ஒன்றில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from Posts English

நம் தேடலில் ஆஜ் தக், அமர் உஜாலா, உ.பி. இந்தியா நியூஸ் உள்ளிட்ட செய்தி ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றிலும் இச்சம்பவம் சமஸ்கித பள்ளியில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. RSS பயிற்சி முகாமில் நடந்ததாக குறிப்பிட்டிருக்கவில்லை.

தொடர்ந்து தேடுகையில் சித்தாப்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.  அதில், இச்சம்பவம் சித்துளி காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிஷோரி பாலிக்யா வித்யாலயா பள்ளியில் நடந்தது எனவும், வைரலாகும் இவ்வீடியோ 2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ எனவும், இச்சம்பவம் தொடர்பாக சதீஷ் ஜோஷி எனும் ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு போலீசார் சென்று மாணவர்களின் நலன் குறித்து விசாரித்ததாகவும் சித்தாப்பூர் போலீசார் பதிவு செய்திருந்தனர்.

கிடைத்த ஆதாரங்களின்படி காண்கையில்  வைரலாகும் இச்சம்பவம் நடந்தது RSS பயிற்சி முகாமில் அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது.

Also Read: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Conclusion

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் சமஸ்கிருதம் சொல்லி தரும் குருகுலப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Posts English, Dated October 09, 2023
Tweet from Sitapur Police, Dated October 09, 2023
Tweet from Sitapur Police, Dated October 09, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular