திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkகரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கும்பலாக கார்களில் வந்து ஆடு திருடிய கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”சேலம் ஆத்தூர் அருகே கும்பலாக கார்களில் வந்து ஆடு திருடிய கரூர் மாவட்ட பாஜகவினர் பொதுமக்கள் பிடித்து அடிக்கக் துவங்கியதும் ”பாரத் மாதா கீ ஜே” என்று கோஷம் போட்டதால் பரபரப்பு” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

கரூர் மாவட்ட பாஜகவினர்
Screenshot from Twitter @jaya2016maha

Archived Link

Screenshot from Facebook/kavivel.vel.7

Archived Link

Screenshot from Facebook/karuppu.anbarasan

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

UPDATE:

நேற்று இந்த போலி நியூஸ்கார்டுகள் கரூர் பாஜகவினர் ஆடு திருடியதாகப் பரவிய நிலையில், இன்று வேறு சில சமூக வலைத்தளப்பக்கங்களில் கரூர் திமுகவினர் ஆடு திருடியதாக நியூஸ்கார்ட் ஒன்று இதே பாணியில் பரவி வருகிறது. அதுவும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட் ஆகும். தந்தி டிவி அதை வெளியிட்டிருக்கவில்லை.

Screenshot from Facebook/Kavikalam

Archived Link

Screenshot from Facebook/ganeshrevathi.lganeshraverhi

Archived Link

Also Read: சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

Fact Check/Verification

கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் வெளியாகிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆராய்ந்தோம்.

தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல். ஆடு திருடிய 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி. பொதுமக்களே இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு திருடர்களை மடக்கி பிடித்தனர். திருடர்களை மீட்க வந்த போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடிட் செய்தே கரூர் பாஜகவினர் ஆடு திருடியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் வைரலாகிறது என்பது இதன்மூலமாக உறுதியாகியது.

Fake News Card
Original News card

தொடர்ந்து, இதுகுறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அதனைத் தந்தி டிவி வெளியிடவில்லை” என்று உறுதிசெய்தார்.

Also Read: சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

Conclusion

கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Phone Conversation with Vinoth Kumar, Thanthi TV, Dated June 26, 2023

Facebook Post From, Thanthi Tv, Dated June 25, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular