திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkமோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இடைக்கால பட்ஜெட் – 2024, மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் மீதமிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் – நிதியமைச்சர்
Fact: வைரலாகும் பட்ஜெட் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”இடைக்கால பட்ஜெட் – 2024, மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் மீதமிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் – நிதியமைச்சர்” என்று இந்த செய்தி பரவுகிறது.

Screenshot from X Salmankhan7199

Archived Link

Screenshot from X @Vinosh_Pinku

Archived Link

மோடி மீண்டும் ஆட்சி
Screenshot from Facebook/san.geeth.161446

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்ததாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் செய்தி தந்தி டிவியில் பட்ஜெட் உரையின்போது நேரலையில் ஒளிப்பரப்பான காட்சி என்பதை புகைப்படத்தில் இருக்கும் செய்தி லோகோ மூலமாக நம்மால் அறிய முடிந்தது.

எனவே, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடைக்கால பட்ஜெட் உரை குறித்த செய்திகளை ஆய்வுக்கு உள்ளாக்கினோம். அப்போது, “LIVE : மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2024 | Union Budget 2024 | LIVE UPDATES | Thanthi TV” என்று தந்தி டிவியில் இடம்பெற்றிருந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வீடியோவில் பொருளாதார நிபுணர் ரகுநாதன் உரையாடும் பகுதியிலிருந்து இந்த புகைப்படம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது.

அதில், 2:13:18 முதல் துவங்கும் ”மறைமுக வரிகளின் எந்தவித மாற்றமும் இல்லை” என்கிற செய்தியின் மீதும், கீழே இடம்பெற்றிருக்கும் ”வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை” என்பதையும் எடிட் செய்து நிர்மலா சீதாராமன் “மோடி மறுபடியும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்” என்று கூறியதாக செய்தியை பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

Also Read: ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்ததாக பரவும் செய்தி எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
YouTube Video from, Thanthi TV, Dated February 01, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular