திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Check‘ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா செந்தில் வேல்?

‘ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா செந்தில் வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ‘ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் ஊடகவியலாளர் செந்தில் வேல்.

Fact: வைரலாகும் பதிவு போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

“ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை… மக்கள் மகிழ்ச்சி.. முன்புபோல் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என டீ கடையில் முதியவர் பேசினார். தளபதியின் சிறப்பான ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படம்

Twitter Link | Archived Link

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படம்

Facebook Link

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!

Fact Check/Verification

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படத்தில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை ஆகியவை இருப்பதை காண முடிந்தது.

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படம்

இவை சந்தேகத்தை ஏற்படுத்தவே செந்தில் வேலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்தோம். இதில் செந்தில் வேல் இவ்வாறு ஒரு பதிவை பதிவிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து செந்தில் வேலை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வைரலாகும் பதிவு குறித்து விசாரித்தோம். அவர், “வைரலாகும் இப்பதிவு போலியானது. அவ்வாறு ஒரு பதிவை பதிவிடவே இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

இதேபோல் செந்தில் வேல் பதிவிட்டதாக பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னர் வைரலாகியுள்ளது. அவற்றையெல்லாம் நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து தெளிவு படுத்தியுள்ளோம்.

Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!

Conclusion

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படமானது போலியாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Senthi Vel, Tamil Kelvi

Self Analysis


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular