ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசெங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் அதை வாங்க மறுத்தார் சித்தராமையா.

Fact: செங்கோல் ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று கூறியே அதை வாங்க மறுத்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெரியார் முகம் பொறித்த செங்கோலை பரிசளித்தபோது, அதில் பெரியார் முகம் இருந்ததால் சித்தராமையா வாங்க மறுத்து பெரியாரை அவமதித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் சித்தராமையா அதை வாங்க மறுத்ததாக பரவும் தகவல்
Screenshot from Twitter@Itz_Katti

Twitter Link | Archived Link

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் சித்தராமையா அதை வாங்க மறுத்ததாக பரவும் தகவல்
Screenshot from Facebook/kaliraj.velayidham

Archived Link

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் சித்தராமையா அதை வாங்க மறுத்ததாக பரவும் தகவல்
Screenshot from Facebook/kanchidistrictbjp

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: லூலு குழுமத்திடம் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி எனப் பரவும் போலி புகைப்படம்!

Fact Check/Verification

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால்  சித்தராமையா அதை வாங்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, மக்கள் சமூக நீதி பேரவையின் சேலம் மாவட்டச் செயலாளர் இலட்சுமணனை தொடர்புக் கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம்.

நமக்கு பதிலளித்த அவர் கூறியதாவது,

“நாங்கள் கர்நாடக முதலைமைச்சரிடம் முன் அனுமதி பெற்று அவரை சந்திக்க சென்றோம். அப்போது ‘செங்கோல்’ என்பது அரசாட்சி மரபை குறிப்பது, அது ஜனநாயகத்திற்கு புறம்பானது.  நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கும்போதே அதை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்தது. ஆகவே செங்கோலை வாங்க முடியாது. உங்கள் அன்பை வேறு விதமாக தந்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்கின்றோம் என கூறப்பட்டது. இத்தகவலானது முதலமைச்சரின் சந்திப்புக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது. இதனால் நாங்கள் செங்கோலை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக பெரியார் புகைப்படம் உள்ளிட்ட வேறு வித பரிசுகளை அவருக்கு அளித்தோம். அவர் எங்களுடன் ஏறக்குறைய 20 நிமிடம் உரையாடினார். அவர் எங்களிடம் சகஜமாகவும், மரியாதையாகவும் பேசினார்."

தொடர்ந்து தேடுகையில் ஊடகங்களும் இதே தகவலை செய்தியாக வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின் படி காண்கையில் செங்கோல் அரச மரபை ஆதரிப்பதாலேயே அதை சித்தராமையா வாங்க மறுத்துள்ளார் என்பதும், பெரியார் சிலை இருந்ததால் அதை அவமதிக்கும் நோக்கில் அவர் புறக்கணிக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது.

Also Read: தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினாரா?

Conclusion

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் சித்தராமையா அதை வாங்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Phone Conversation with Lakshmanan, Salem District Secretary, Makkal Samooga Neethi Peravai, Dated June 19, 2023
Report from ABP Naadu, June 18, 2023

Report from Vikatan, June 18, 2023
Report from News 7 Tamil, June 19, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular