Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மேற்கு வங்கத்தில் தொழுகை செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறு விளைவித்ததால் ரயில் நிலையம் உடைக்கப்பட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

“மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த்தெடுத்து ரயில்வே நிலையத்தையும் உடைத்தார்கள். காரணம் தெரியுமா? அவர்கள் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூராக இருக்கிறதாம்” என்று குறிப்பிட்டு இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


Also Read: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமருக்கு பதிலடி தந்ததாக பரவும் பழைய செய்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மேற்கு வங்கத்தில் தொழுகை செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறு விளைவித்ததால் ரயில் நிலையம் உடைக்கப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி மேற்கண்ட நிகழ்வு குறித்து தேடினோம். இத்தேடலில் வைல்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா (Wild Films India) எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோக்கள் CAA போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவேற்றப்பட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மால்டா ரயில்வே துறையின் மாவட்ட மேலாளரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு கேட்டதில், அவரும் இந்த நிகழ்வு CAA போராட்டத்தின்போது நடந்ததுதான் என்பதை உறுதி செய்தார்.
கடந்த 2019 ஆம் CAA சட்டம் நிறைவேற்றப்பட்டபோது மேற்கு வங்கம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து, விஷமிகள் சிலரால் தொழுகை செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறு விளைவித்ததால் ரயில் நிலையம் உடைக்கப்பட்டது என்கிற பொய் கதை தற்போது சமூக வலைத்தளத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.
Also Read: மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?
தொழுகை செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறு விளைவித்ததால் ரயில் நிலையம் உடைக்கப்பட்டது என்று வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Source
Wildfilmsindia.Com
Conversation with Malda railway station Deputy Manager
(இந்த செய்தி ஏற்கனவே நியூஸ்செக்கரின் பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 4, 2022
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022