இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
வீடு மற்றும் கடை வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கின்றதா?
எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்றாரா இலங்கை அதிபர்?
இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கோடையில் அதிகபட்ச வரம்புக்கு பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என்றதா இந்தியன் ஆயில் ?
கோடையில் அதிகபட்ச வரம்புக்கு பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு 39,532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதா?
சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.39,532 கோடி ஒதுக்கியுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)