இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்றாரா பிரதமர் மோடி?
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?
ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகும் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி உண்மையா?
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் தன்னை இறக்கி விட்ட இந்திய தூதரகம் அதன்பிறகு அங்கிருந்து தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதாகப் பரவுகின்ற புகைப்படம் தவறான நோக்கில் பரப்பப்படுகிறது.

உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்றதா இந்திய அரசு?
உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்று இந்திய தூதரகம் கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)